சமூக வலைதளங்களில் வைரலாகும் ட்ரம்பின் புகைப்படம் ; வலுக்கும் விமர்சனங்கள்
மவுண்ட் ரஷ்மோரில் நீங்கா இடம் பிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளுடன், தனது உருவமும் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தெற்கு டகோட்டாவின் கீஸ்டோனில் மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, அமெரிக்காவின் பிறப்பு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதிகளின் 60 அடி உயர முகங்கள் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலையில் தனது முகமும் செதுக்கப்பட வேண்டும் என்பது தனது கனவு என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே 2018ல் தெற்கு டகோட்டா கவர்னர் கிறிஸ்டி நோயமிடம் தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக புளோரிடா பிரதிநிதி அன்னா பாலினா லூனா போன்ற காங்கிரஸின் முக்கிய ஆதரவாளர்கள் சட்டப்பூர்வ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், உள்துறைச் செயலாளர் டக் பர்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் மற்றொரு முகத்தைச் செதுக்குவதற்குப் போதுமான இடவசதி இருப்பதாகக் குறிப்பிட்டு இத்திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், மவுண்ட் ரஷ்மோரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளுடன், தனது உருவமும் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, அமெரிக்க கரன்சி நோட்டுகளில் டிரம்பின் முகம் அச்சிடும் பணி முழு வீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.