ரஸ்யாவிற்கு அமெரிக்கா விடுக்கும் கடுமையான எச்சரிக்கை
உக்ரைன் போர் விவகாரம் தொடர்பில் ரஸ்யாவிற்கு, அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்தும் ரஸ்யா தாக்குதல்களை நடாத்தினால் அதன் மீது கடுமையான தடைகளை விதிக்க நேரிடும் அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெல்லன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பது குறித்து தொடர்ச்சியாக நேச நாடுகளுடன் பேசப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான மேலதிக தடைகள் அல்லது அழுத்தங்கள் ரஸ்யா மீது பிரயோகிக்கப்படும் என்பது குறித்த விபரங்களை யெல்லன் வெளியிடவில்லை.
எனினும், ரஸ்யா தொடர்ந்தும் உக்ரேய்ன் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தயங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகளினால் ரஸ்யா மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.