போருக்கான புதிய திசையை குறி வைக்கும் ரஷ்யா! அச்சத்தில் உக்ரைன்
உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதால், போரின் புதிய திசையை குறிப்பிடுவதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் திகதி ரஷ்ய துருப்புகள் குண்டுகள் வீசி தாக்குதலை தொடங்கியது. அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்தது.
அதன்படி நேற்றைய தினம் (10-03-2022) துருக்கியில் ரஷ்யா- உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
இதற்கிடையே சுமி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா, மனிதாபிபமான பாதையை திறந்துவிட்டது. நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இன்று யாரும் எதிர்பாராத வகையில் மேற்கு பகுதியில் உள்ள இவானே-பிரான்கிவ்ஸ்க், லட்ஸ்க் ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நகரங்களில் உள்ள விமான நிலையம் அருகே தாக்குதல் நடைபெற்றுள்ளது.