உக்ரைனின் குடியிருப்பு கட்டிடங்களை உருகுலைத்த ரஷ்ய படைகள்!
உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எலும்புக் கூடுகளாக காட்சியளிக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் சின்னா பின்னமாகி வருகிறது.
அந்த வகையில் கிழக்கு உக்ரைனின் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உருக்குலைந்த உக்ரைன் ஒலெக்ஸாண்ட்ரிவ்கா நகரின் ட்ரோன் காட்சிகளும் வெளியாகி உள்ளன.