குடியிருப்பு வளாகத்தில் துணீகர சம்பவம்: நடுக்கத்தில் மக்கள்
Etobicoke பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில், மேலும் மூன்று ஆண்கள் மருத்துவமனையில் உள்ளனர். சுமார் 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
3 கார்களில் வந்த நபர்களே தங்களுக்குள் இந்த தாக்குதல் சம்பவத்தை முன்னெடுத்ததாக தெரிய வந்துள்ளது. மொத்தம் 100 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கண்டறிந்துள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் சம்பவப்பகுதியில் இருந்து எந்த பகுதிக்கு மாயமானார்கள் என்பது தொடர்பில் விசாரிப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரை ரவுண்டானா அருகில் கண்டுபிடித்தனர், மேலும் இருவர் ரிச்ரோவ் டிரைவ் அருகே தெருவில் சுருண்டு விழுந்து கிடந்துள்ளனர்.
மொத்தம் நால்வர் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.