பெண்ணை கொடூரமாக தாக்கி உயிருடன் எரித்த வழக்கு: அதிகாரிகள் எடுத்த முக்கிய முடிவு
கனடாவில் பூர்வக்குடி பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி, உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் Saskatchewan நபருக்கு பிணை மறுத்துள்ளது சிறை நிர்வாகம்.
பிரின்ஸ் ஆல்பர்ட் பகுதியில் கடந்த 2014ல் பூர்வக்குடி பெண்ணான Marlene Bird என்பவரை கொடூரமகா தாக்கி, சீரழித்து பின்னர் உயிருடன் எரிக்க முயன்றுள்ளார் தற்போது 35 வயதாகும் Leslie Black என்பவர்.
ஆனால் காயங்களுடன் மிக மோசமான நிலையில் உயிர் தப்பிய Marlene Bird, சிகிச்சையின் ஒருபகுதியாக தமது இரண்டு கால்களையும் இழந்தார்.
மட்டுமின்றி கண் பார்வையும் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2017ல் தமது 50 வயதில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து, பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
Marlene Bird இறந்த சில மாதங்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட Leslie Black-கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணைக் கைதியாக 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறையில் இருந்துள்ளதால், அவருக்கு 11 வருடங்கள் மட்டும் சிறை வாசம் அனுபவித்தால் போதும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் பிணையில் விடுவிக்க கோரி அதிகாரிகளை நாடிய Leslie Black, தமது தாயாரின் கொலை நடந்த நாள் அது எனவும், அதனாலையே மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், இந்த சூழலிலேயே தாம் முன்பின் தெரியாத Marlene Bird-ஐ தாக்கியதாகவும், மது அருந்தியிருந்ததாலையே பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், Marlene Bird-ன் உடைகளில் நெருப்பு வைத்த பின்னர் அவர் கடைக்கு சென்று இனிப்பு வாங்கி சாப்பிட்டுள்ளார். மீண்டும் Marlene Bird குற்றுயிராக கிடந்திருந்த பகுதிக்கு வந்துள்ளார், அப்போதும் அவரது உடலில் தீ எரிந்தபடி இருந்துள்ளது, அதை கண்டும் காணாதது போன்று அங்கிருந்து சென்றுள்ளார்.
சம்பவம் நடந்து பல மணி நேரத்திற்கு பின்னர் மிக ஆபத்தான நிலையில் Marlene Bird மீட்கப்பட்டார். அப்போது அவரின் எலும்புகள் வெளியே தெரியும் மட்டும், தீயில் கருகிப்போயிருந்தார்.
தற்போது Leslie Black பிணை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், உளவியல் காரணங்களை முன்வைத்து அவருக்கு பிணை மறுத்துள்ளனர்.