Jeffrey Donaldson எதிரான 18 பாலியல் குற்றச்சாட்டு; விசாரணை ஆரம்பம்
பிரித்தானியா ஜனநாயக ஐக்கியக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெப்ரி டொனால்ட்சனுக்கு (Jeffrey Donaldson) எதிரான 18 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை, நியூரி கிரவுண் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
வழக்கின் ஆரம்பக் கட்ட விபரங்களை அரச தரப்பு சட்டத்தரணி ஜூரிகள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

உடந்தையாக இருந்த மனைவி
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பெண்கள், பொலிசாரிடம் , ஜெப்ரி டொனால்ட்சன் (Jeffrey Donaldson) மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இருப்பினும் ஜெப்ரி டொனால்ட்சன் (Jeffrey Donaldson) தன் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து 18 குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்து வாதாடியுள்ளார்.
இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி லேடி எலினோர் டொனால்ட்சனும் (Lady Eleanor Donaldson) தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு கவுண்டி டவுனில் (County Down) உள்ள இவர்களது இல்லத்தில் வைத்து தம்பதியினர் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது