எலான் மாஸ்கின் திடீர் அறிவிப்பால் சரிந்த டுவிட்டர் நிறுவன பங்குகள்!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க் (Elon Musk) , அண்மையில் டுவிட்டர் தளத்தை வாங்குவது உறுதியானது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் (Elon Musk) அறிவித்ததை அடுத்து டுவிட்டர் நிறுவன பங்குகள் சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் (Elon Musk) தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Twitter deal temporarily on hold pending details supporting calculation that spam/fake accounts do indeed represent less than 5% of usershttps://t.co/Y2t0QMuuyn
— Elon Musk (@elonmusk) May 13, 2022
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து டுவிட்டர் நிறுவன பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது. அதேசமயம் எலான் மஸ்கின் (Elon Musk) கருத்து குறித்து டுவிட்டர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதேவேளை 3.34 லட்சம் கோடிக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் (Elon Musk) ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.