உக்ரைன் தாக்குதலில் ரஸ்ய சிவிலியன்கள் பலி?
உக்ரைன் படையினர் நடாத்திய தாக்குதல்களில் ரஸ்ய சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஸ்யா பாதுகாப்பு அமைச்சினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரஸ்யாவின் கெர்ஸன் பிராந்திய கிராமங்கள் மீது உக்ரையன் படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரையன் படையினர் ரஸ்யாவின் கய்செலிவிக்கா மற்றும் ஷிரோக்கா பலாக்கா ஆகிய கிராமங்களின் பாடசாலை, பாலர் பாடசாலை மற்றும் மயானம் என்பன மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், தாக்குதல் சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எவ்வளவு பேர் காயமடைந்தனர் எப்போது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதனையும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உக்ரைன் எவ்வித பதிலையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.