பிரான்ஸில் பயணப்பெட்டியை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!
பிரான்ஸில் பயணப்பெட்டிக்குள் மறைத்து பெண்களை கடத்திய இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த வாரம், கலே பகுதியிக்கு அருகே உள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு இளம் நபர்கள் மகிழுந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், சுங்கவரித்துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டனர்.
அப்போது அவர்களது மகிழுந்துக்குள் இருந்த இரண்டு பயணப்பெட்டிக்குள் இரு இளம் பெண்களை மறைத்து அழைத்துச் செல்லப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, இரு இளம் பெண்களும் உடனடியாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. இவர்கள் இருவரையும் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாக அறிய முடிகிறது.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்தில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த இரண்டு பெண்களும் 20 வயதிற்குட்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரிசைச் சேர்ந்த அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனத்தை ஓட்டி சென்ற சாரதியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர்களுடன் இணைந்து செயற்படும் கும்பல்கள் உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.