ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு... பரபரப்பான பொலிஸ்: பின்னர் தெரிய வந்த உண்மை
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் நூற்றாண்டு பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு நப்பதாக கூறி பொலிசாரை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் மோன்க்டன் பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பரபரப்பான பொலிசார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாடசாலைகள், தொழில் கூடங்கள் என அனைத்தையும் மூட வைத்தனர்.
மட்டுமின்றி அப்பகுதி மக்கள் எவரையும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் கட்டுப்படுத்தினர்.
இந்த மாத துவக்கத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது 36 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று பகல் சுமார் 8.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் நூற்றாண்டு பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு நப்பதாக பொலிசாருக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
தகவலை உண்மை என நம்பிய பொலிசார் அப்பகுதியை சுற்றி வளைத்ததுடன், தீவிர தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் பொலிசாருக்கு கிடைத்த தகவல் பொய் என தெரியவந்த நிலையில், மாலை சுமார் 6 மணியளவில் எச்சரிக்கை விலக்கப்பட்டது.
மே 13ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் Shediac Cape பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு அதிக கேள்விகள் எழலாம். அத்தனைக்கும் நீதிமன்ற விசாரணையில் பதில் கிடைக்கும் என பொலிசார் தெரியப்படுத்தியுள்ளனர்.