அமெரிக்ககாவில் மீண்டுமொரு பயங்கர சம்பவம்: 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்ககாவில் டென்னிசி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், அதுவே அங்கு பல சந்தர்ப்பங்களில் விபரீதத்திற்கு வழி வகுக்கிறது. அந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு பலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக கடைகள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் தொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை.