அமெரிக்காவில் வீடொன்றிற்குள் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு! 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
நேற்று முன்தினம் (14-03-2023) அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பில் தகவலறிந்த பொலிஸார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால் எதற்காக கொன்றனர் என்பது தெரியவில்லை.
மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.