சாலை விபத்தில் பரிதாபமாக இறந்த சகோதரர்களின் புகைப்படம் வெளியானது
ஒன்ராறியோவின் வாகன் நகரில் கார் மோதி பரிதாபமாக பலியான சகோதரர்கள் தொடர்பில் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் 10 வயது சிறுமி மற்றும் அவரது 4 வயது சகோதரர் உட்பட மூவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.
இதில் 10 வயது அனயா மற்றும் ஜாக்ஸ்(4) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். தற்போது அந்த சிறுவர்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சிறுமி அனயா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டவர் எனவும், மிகுந்த அக்கறை கொண்டவர் எனவும் உறவினர்களால் கொண்டாடப்படுகிறார்.
அதேப்போலவே, சிறுவன் ஜாக்ஸ் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவர் எனவும், செல்லப் பிராணிகள் மீது அதிக பாசம் காட்டுபவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அனயா மற்றும் ஜாக்ஸ் தங்களது குடியிருப்பு அருகே டஃபெரின் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாய்ந்து வந்து, சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
சிறுவர்களுடன் இருந்த அண்டை வீட்டார் ஒருவர் காயங்களுடன் தப்பினாலும், அவருக்கு ஆபத்தில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் 16 வயது கார் சாரதியை சம்பவயிடத்தில் வைத்தே பொலிசார் கைது செய்துள்ளனர்.