தூக்கிலிருந்து தப்பிய இந்தியா வம்சாவளியை சேர்ந்த நபர்
சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி, துாக்கு தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு, 2014ல் சென்ற மலேஷியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி மங்களகிரி துருவா குமார், 50, என்பவர், சாந்தி கிருஷ்ணன் என்ற பெண்ணிடம், போதைப் பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது.பின், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், சாந்தியை கைது செய்தனர்.
அவருடன், ஜைனுதின் முகமது என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 22.73 கிராம் எடையிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.சிங்கப்பூரில், 15 கிராமுக்கு அதிகமாக, போதைப் பொருளை கடத்தினால், மரண தண்டனை விதிக்கப்படும். அதன்படி, ஜைனுதினுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சாந்தி, ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து மங்களகிரி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:போதைப் பொருளை மங்களகிரி வினியோகித்ததற்கு ஒரே சாட்சியாக இருப்பது சாந்தி மட்டும் தான்.
எனினும், விசாரணையின்போது அவர் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன; நம்பகத்தன்மை இல்லை.எனவே, இதன் அடிப்படையில், இந்த வழக்கில் இருந்து மங்களகிரி விடுவிக்கப்படுகிறார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.