இலங்கையில் பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் சீன நிறுவனம்!
இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவ சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதை இலங்கை பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்தின் இந்த பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்துள்ளது.