லண்டனில் பலியான இலங்கை தமிழ் குடும்பம்: தீ விபத்திற்கான முக்கிய காரணம் வெளியானது!
லண்டனில் நேற்று முன்தினம் (18) நடந்த தீ விபத்திற்கு காரணம் கார்த்திகை தீபம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கீழ் உள்ள படிகளில், இலங்கை பெண்ணான நிரூபா என்ற 2 பிள்ளைகளின் தாயாரும். நிருபாவின் தாயும் இணைந்து தீபங்களை ஏற்றி வைத்துள்ளார்கள்.
அதில் இருந்து பரவிய தீ காரணமாக அவர்களால் கீழே செல்ல முடியவில்லை. தப்பிக்க வேறு வழிகளும் இருக்கவில்லை. ஜன்னல் வழியாக குதித்தும் இருக்க முடியும். ஏன் எனில் நிருபாவின் கணவரின் தம்பி உள்ளே உறங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
அவர் நெருப்பின் புகை காரணமாக எழுந்து, ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளார். ஆனால் கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழர்களே இதில் இருந்து பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நேற்று முன்தினம் லண்டனில் எத்தனை பேர் உங்கள் வீடுகளில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தீர்கள்? அது சற்று தவறி இருந்தால் உங்கள் வீட்டிலும் இதே நிலை தான் தோன்றி இருக்கும் என்பதனை எவரும் மறக்க வேண்டாம்.
எமது சாத்திர சம்பிரதாயங்கள் மிக மிக முக்கியம் தான். கார்த்திகை தீபம், முதல் கொண்டு பொங்கல் வரை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் நாம் இருப்பது வெளிநாட்டில். எனவே அதற்கு தகுந்தால் போல வாழப் பழகிக் கொள்ளுதல் நல்லது. கார்த்திகை தீபத்தை வீட்டின் முன் வாசலில் வைக்க முடியும்.
அதுவும் நிலத்தில் வைத்தால் அதனால் வீட்டுக்கு ஒன்றும் நடக்காது. மேலும் சொல்லப் போனால் இப்படியான சில விபத்துகளுக்கு காப்பீடு கூட கிடையாது. ஏன் என்றால் நீங்கள் தான் வீட்டை எரித்தீர்கள் என்று கூறுவார்கள்.
வீட்டில் ஊது பத்தி கொழுத்தி வைத்து, அதில் தீ பிடித்து ஒரு தமிழ் குடும்பத்தில் சிலர் இறந்த சம்பவம் உங்களில் பலருக்கு நினைவு இருக்கலாம்.
இன்று இளம் குடும்பப் பெண் நிரூபா, அவரது பெண் குழந்தை ஷசனா மற்றும் மகன் தபிஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்துள்ளார்கள். இது போக பிள்ளைப் பெற்றை பார்க்க வந்த நிரூபாவின் தாயாரும் இறந்து விட்டார்.
குடும்பத்தாரை இழந்து தவிக்கும் நிரூபாவின் கணவர் யோகன் தங்க வடிவேல், தீராத துயரில் உள்ளார். மேலும் நிரூபாவின் மைத்துனர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.