பிரான்சில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில் , கடந்த 24 மணி நேரத்தில் 20,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,586 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பாதிப்பு எண்ணிக்கை 22,139 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் இனி வரும் நாட்களில் இதே போன்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் பிரான்சில் தற்போது 27,369 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.