தென் ஆப்பரிக்காவில் கடும் வெள்ளப்பெருக்கு: வெளியான செயற்கைக்கோள் படங்கள்!
தென் ஆப்பிரிக்காவில் பெய்ந்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை (11-04-2022) இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.
வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பில் செற்க்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.