இரவு விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு! ஸ்பெயினில் சம்பவம்
ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் நகரில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்டலயாஸ் பகுதியில் உள்ள பிரபலமான டீட்டர் இரவு விடுதியில் சுமார் 06:00 மணியளவில் (04:00 GMT) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்கள் பகிரப்பட்ட காணொளியில், கட்டிடத்தின் மேலே தீப்பிழம்புகள் எரிவதையும், அதன் பெரிய ஜன்னல்களில் இருந்து அடர்ந்த, இருண்ட புகை வெளியேறுவதையும் காட்டுகிறது.
காணாமல்போன மற்றும் அந்தவேளை வளாகத்தில் இருந்தவர்களை அவசர சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், முர்சியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.
உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர் எனவும் மேயர் ஜோஸ் பலேஸ்டா தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் இறுதியாக 08:00 மணியளவில் உள்ளே நுழைந்து நான்கு உடல்களைக் மீட்டனர், பின்னர் 40 நிமிடங்களுக்குப் பிறகு மேலும் இரண்டு உடல்களைக் மீட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன.
புகையை சுவாசித்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளூர் விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படுகிறது.
விடுதி பரபரப்பாக இருந்தபோது ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.