ஆஸ்திரேலியாவில் இலங்கப்பெண் ஒருவர் பரிதாப மரணம்
ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திஒல் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், குறித்த பெண் தற்போது ஆஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருவதாகவும், அவரது கணவரும் ஆஸ்திரேலியாவில் பொறியாளராக பணிபுரிவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் தனது கணவர் உட்பட மற்றொரு குழுவுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் சிட்னி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
