இஸ்ரேலிய வீரர்களை கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையில் நாப்ளஸ் அருகே இஸ்ரேலிய வீரர்களை கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனியர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவமும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளன. ஒரு மேற்குக் கரை இராணுவ நிலையில் இருந்த வீரர்கள், இரண்டு வீரர்களைக் குத்த முயன்ற ஒரு தாக்குதலைக் கண்டதாக இஸ்ரேல் இராணுவம் ஒரு அறிக்கையில், கூறியது.
அத்துடன் “படையினரில் ஒருவர் தாக்குதல் நடத்தியவரின் பல கத்திக் குத்து தாக்குதல்களைத் தடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த வீரர்களின் தளபதி, தாக்குதலில் ஈடுபட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதன்போது இஸ்ரேலிய படைகளுக்கு எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். இதற்கிடையே பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஆக்கிரமிப்புப் படைகளால் ஒரு குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.
அதிகாரப்பூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா, கிதாவ் அவிசார் சந்திக்கு அருகில் உள்ள கராவத் பானி ஹாசன் என்ற ஊரைச் சேர்ந்த அட்டா ரயான் எனும் 17 வயதான நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போரிலிருந்து இஸ்ரேல் மேற்குக் கரையை ஆக்கிரமித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் மீது பாலஸ்தீனியர்கள் தனி-ஓநாய் தாக்குதல்கள் என்று அழைக்கப்படும் இது போன்ற தாக்குதல்களை மேற்கொள்வது இப்பகுதியில் பொதுவானது. சிலர் துப்பாக்கிகளுடன் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும் அங்கு பெரும்பாலானவர்கள் கத்திகளுடன் மட்டுமே தாக்கி வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.