உணவுப் பொருள் விலை உயர்வு ; இலங்கையை போல மற்றுமொரு நாட்டில் வெடித்த போராட்டம்!
ஈரானில் உணவுப் பொருள் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரானில் கோதுமையின் விலை பலமடங்காக உயர்ந்ததன் காரணமாக அடிப்படை உணவுகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அதேபோல, பால் பொருள்கள், சமையல் எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த இரு நாள்களாக ஈரானில் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் அந்நாடு பொலிஸார் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட, 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளதாகவும், போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.