சூடானில் வெடித்த போராட்டம்! 168 பேர் பலி
சூடானின் டார்புர் பிராந்தியத்தில் அரபிகள் மற்றும் அரபு அல்லாதோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 168 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு டார்புர் மாகாணத்தின் கிரைனிக் பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலில் மேலும் 98 பேர் காயமடைந்ததாக டார்பூரின் அகதி மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான பொது ஒருங்கிணைப்பு பேச்சாளர் அடம் ரிகால் தெரிவித்துள்ளார்.
கிரைனிக்கில் அடையாளம் தெரியாத தாக்குதல்தாரியால் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை இந்த மோதல் வெடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மேற்கு டார்புர் மாகாணத் தலைநகரான கெனேனாவில் ஆயுதக் குழுக்களால் பலர் தாக்கப்பட்டதுடன் வீடுகளு தீகிரையக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இந்த மோதல்கள் காரணமாக சுமார் 20,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக டார்புர் வழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளது.