திடீரென மயங்கி விழுந்த எஜமான்; வளர்ப்பு நாயின் பாசமிகு செயல்
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த தன் எஜமானரை, அவரின் செல்போனுக்கு அருகே இழுத்து சென்ற அவரது நாய், அவசர எண்ணை அழைக்க உதவி செய்துள்ளது. அத்துடன் அவருக்கு மயக்கம் வராமல் இருப்பதாக அவரது முகத்தை தன் நாக்கால் நக்கி உள்ளது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
மனிதனின் சிறந்த நண்பர்களாக உள்ள நாய்கள், தனது எஜமானர்களுக்கு மிகவும் விஸ்வாசமாக நடந்து கொள்ளும். அதனை மெய்ப்பிக்கும் விதத்தில், அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நியூ ஜெர்ஸியில் வசிக்கும் பிரையன் என்பவர், 6 வயது நிரம்பிய சேடி என்ற ஜெர்மன் ஷெபர்டு நாய் ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டில் இருந்த போது, பிரையனுக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தரையில் சரிந்து விழுந்திருக்கிறார்.
இதனையடுத்து அவர் மயக்க நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவரது நாய், தன் நாக்கை கொண்டு அவர் முகத்தில் தொடர்ந்து நக்கி அவர் மயக்கம் அடையாமல் செய்திருக்கிறது.
அத்துடன் அவரை வேறு ஒரு அறையில் இருந்த மொபைல் அருகே அவரை அழைத்து சென்ற நிலையில் அவர் தன் மொபைலை எடுத்து அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார். சாடியின் விரைவான சிந்தனை தான் பிரையனின் உயிரை காப்பாற்றி உள்ளது.
தற்பொழுது மருத்துவமனையில் பிரையன் சிகிச்சையில் உள்ளார். வீட்டில் பிரையனின் குடும்பத்துடன் சேடி இருக்கிறது. இருவரும் தினமும் இரவு நேரம், வீடியோ காலில் சந்திப்பதாகவும், மீண்டும் நேரில் சந்திக்க இருவரும் காத்திருப்பதாகவும், பிரையனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சாடி – பிரையனின் உண்மை கதை, நெட்டிசன்களுக்கு கண்ணீர் வரழைத்துள்ளது. டுவிட்டரில் ஒரு பயனர், “சாடி நீங்கள் உண்மையிலேயே ஆச்சரியமானவர்; பிரையன், நீங்கள் ஜாக்பாட்டை அடித்தீர்கள் என்று நினைக்கிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.
வேறு ஒருவர், “அற்புதம்! நாய்கள் சிறந்தவை. சாடி, நீ மிகவும் சிறப்பு வாய்ந்தவள்’ என பதிவிட்டுள்ளார்.