கனடாவில் இடம்பெற்ற கூட்டத்தில் இருந்து தப்பியோடிய சுமந்திரன்: வெளியான காணொளி
கனடா இடம்பெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் (Rasamanickam Shanakkiyan) மற்றும் எம்.ஏ சுமந்திரன்(M.A.Sumanthiran) ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் (Rasamanickam Shanakkiyan) இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி 'சுமந்திரன் தமிழினத் துரோகி' என்று கோசமிட்டு கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதன் காரணமாக குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுடதுடன், கூட்டத்தின் இடைநடுவே சுமந்திரன் வெளியேறிச் சென்றார்.