டொரொண்டோவில் கத்தி குத்து தாக்குதல்; ஒருவர் படுகாயம்
கனடாவின் டொரொண்டோ ரீஜென்ட் பார்க் Regent Park பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட கத்தியகுத்து சம்பவத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பார்லிமெண்ட் வீதிக்கு கிழக்கே உள்ள ஸாக்வில்லே மற்றும் டண்டாஸ் வீதிகள் சந்திப்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக மாலை 7 மணியளவில் தகவல் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, காயமடைந்த நிலையில் இருந்ததை அவதானித்துள்ளனர்.
அந்த நபர் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என டொரொண்டோ மருத்துவ உதவிப்பணியாளர்கள் (Paramedics) தெரிவித்துள்ளனர்.
ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரும் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கத்தியகுத்து சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.