ஏபிபி நிறுவனத்துககு 43 லட்சம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்த சுவிஸ்!
சுவீடிஷ்- சுவிஸ் பொறியியல் நிறுவனமான ஏபிபி நிறுவனத்துககு சுவிட்ஸலாந்து 43 லட்சம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகருக்கு அருகில், குசைல் மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
உலகின் 4 ஆவது மிகப் பெரிய அனல் மின்நிலையம்
உலகின் 4 ஆவது மிகப் பெரிய அனல் மின்நிலையமான இம்மின்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இம்மின்நிலைய நிர்மாணம் தொடர்பில் லஞ்சம் வழங்கப்படுவதை தடுக்கத் தவறியதாக, சுவிட்ஸர்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட ஏபிபி நிறுவனம் ஒப்புக்கொண்டதாக சுவிட்ஸர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்நிறுவனதுக்கு 4 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது , விசாரணைகளுக்கான செலவாக 50,000 சுவிஸ் பிராங்குகள் செலுத்த உத்தரவிடப்பட்டதாகவும் சுவிஸ் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.