சகல பயணக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது சுவிஸ் அரசு
கோவிட் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த சகல பயணக் கட்டுப்பாடுகளையும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக வெளிநாட்டுப் பயணிகள் எவ்வாறு சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்தார்களோ அதே நிலைமை இனி வரும் காலங்களில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்கும் விமானப் பயணிகள் கோவிட் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் அமுலாகும் வரையில் சுவிட்சர்லாந்தில் கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.