சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்க்களை செலுத்திய பலருக்கு மீண்டும் கொரோனா!
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திய பலருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று பரவியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்க்களை செலுத்தினாலும் மீண்டும் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றமை ஐக்கிய அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் சீனாவின் தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஐக்கிய அமீரகத்தில் மட்டும் 39.3 % மக்களிடம் முழுமையாக கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்க்கள் செலுத்தப்பட்டு உள்ளது. பக்ரைன் நாட்டில் மட்டும் 39.7 % மக்களிடம் முழுமையாக கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்க்கள் செலுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் சீனாவின் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த பலருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு மூன்றாம் டோஸ் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.