தைவானில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தைவானில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தைவானில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த ஷிமெண்டிங் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. தைவானில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதித்துள்ள
அந்நாட்டு அரசு, பொழுதுபோக்கு இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 312 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,862 பேர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆகும். கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை 1,133 பேர்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாட்டினர் தைவான் வருவதற்கு ஒரு மாதம் தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.