தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து: 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
தைவான் நாட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தைவான் - பிங்டங் மாகாணத்தில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் திடீரென அங்கு கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அந்த தொழிற்சாலை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுதண்ணீரை தாரை அடித்துள்ளனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் சிலர் மாயமாகி உள்ளதால் தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.