ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹாரை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க இராணுவம் அங்கிருந்து வெளியேறி வருவதுடன் ஓகஸ்ட் 30ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர்.
முக்கிய நகரங்களை வரிசையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். நேற்று முன் தினம் இரண்டு மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதுடன் தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில், கந்தஹார் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டது. நகரத்தில் உள்ள தியாகிகள் சதுக்கத்தை, முஜாஹிதீன்கள் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.