பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்! 19 பேர் பலி
பர்கினோ பசோவின் சமண்டென்ஹா மாகாணத்தில் ராணுவ முகாம் அருகே நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட மொத்தம் 19 உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இவர்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர் எனவும் அத்தாக்குதலில் பலர் உயிரிழந்ததுள்ளதாகவும் கூறப்படுகின்றது.