பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பு!
பாகிஸ்தான் கராச்சி மாகாணத்தில் மதவழிபாட்டு ஸ்தலம் அருகே உள்ள சந்தைப் பதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஹரெடார் பகுதியில் சந்தை மற்றும்அதன் அருகே மத வழிபாட்டு தளமான மசூதி உள்ளது.
இந்நிலையில்,சந்தைப் பகுதியில் நேற்றிரவு பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 12பேர் காயமடைந்தாக தெரியவந்துள்ளது.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.