ட்ரம்பின் வரிவிதிப்பால் பெரும் அவதிப்படும் அமெரிக்க மக்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க மக்கள் அதிக பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அதிகளவு வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்ததோடு இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார்.
கடுமையான விலை உயர்வு
அதன் பின்னர் 60 நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பையும் அறிவித்துள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி முதல் இன்னும் அதிக வரிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த வரி உயர்வு விரைவில் அமுலுக்கு வர உள்ள நிலையில் அமெரிக்க மக்கள் பழங்கள், பற்பசை முதல் மின்னணு பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் வரை அன்றாட அத்தியாவசியப் பொருட்களை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர்.
ட்ரம்பின் அறிவிப்பால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயரலாம் என கூறப்படுகிறது.
மின்னணு பொருட்கள், ஆடைகள், காலணிகள், வாகன பாகங்கள்,மருந்துகள் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
எதிர்வரும் வாரங்களில் இவை அனைத்தின் விலைகளும் கடுமையாக உயரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.