சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய மரண தண்டனை!
சிங்கப்பூரில் இன்று நாகேந்திரனிற்கு காலை மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மலேசியாவின் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது.
வர்ணமயமான டீ சட்டை நீல நிற ஜீன்ஸ் மற்றும் விளையாட்டின்போது அணியும் வெள்ளை நிற காலணியை அணிய வேண்டும் என்ற அவரது கடைசிய ஆசை நிறைவேற்றப்பட்டது.
அந்த உடையுடன் நாகேந்திரன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிங்கப்பூர் மனித உரிமை ஆர்வலர் கேர்ஸ்டன் ஹன்(Kirsten Hahn) சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஆத்மா சாந்தியடையட்டும் நாகேந்திரன் என்றும் அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனைக்கு முன்னதாக நாகேந்திரன் அணிந்துகொள்வதற்காக உடைகளை வாங்கிவருவதற்கும் அந்த உடையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கும் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.
நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ அந்த புகைப்படங்கள் அவரது குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என இன்று தமது முகநூலில் கேர்ஸ்டன் ஹன்( Kirsten Hahn)பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நாகேந்திரனுக்கு விருப்பமான உடை இதுதான் என அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்தார். அடக்கம் செய்வதற்காக நாகேந்திரனின் உடலை ஈப்போவிற்கு கொண்டுச் செல்வதற்கு மலேசிய பிரதே வாகன சேவை நிறுவனம் முன்வந்ததாக மனித உரிமை வழக்கறிஞரான ஆ. ரவி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி,
வெளிநாடொன்றில் தமிழ் இளைஞனுக்கு நாளை மரணதண்டனை; பெரும் தவிப்பில் குடும்பம்!


