அசர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 20 பேர்!
அசர்பைஜான் நாட்டில் உள்ள கியாஸ் நிலையம் தீப்பிடித்ததில் அதில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலியான நிலையில், 300-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசர்பைஜானுக்கு சொந்தமான நாகோர்னோ-கராபாக் பகுதி 1994-ம் ஆண்டு முதல் அண்டை நாடான அர்மீனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாகோர்னோ-கராபாக் பகுதிகளை அங்குள்ள பிரிவினைவாதிகள் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர்.
தனது நாட்டின் பகுதிகளை மீண்டும் இணைக்கும் வகையில் அசர்பைஜான் இராணுவம் அங்கு அதிரடியாக களமிறங்கியது.
அப்போது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரிவினைவாதிகள் சரண் அடைந்தனர். அணிவகுத்த கார்கள் இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்தவர்கள் அர்மீனியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர்.
இதனால் அசர்பைஜானின் ஸ்டெபனகெர்ட்டில் உள்ள கியாஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன.
அப்போது அந்த கியாஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் பல கார்கள் தூக்கி வீசப்பட்டன.
மேலும் அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பாய்ச்சியடித்தனர்.
பின்னர் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.