சீனாவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று (வெள்ளி கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
சீனாவின் டாலிக் பகுதியில், நேற்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இதனை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சீனாவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.