அமெரிக்காவில் கணவனை கத்தியால் குத்திவிட்டு காரில் 03 குழந்தைகளுடன் ஏரிக்குள் பாய்ந்த மனைவி
அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென ஏரி ஒன்றிற்குள் பாய்ந்துள்ளது. இதுபற்றி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்படி, குடும்ப சண்டையால் பெண் ஒருவர் அவருடைய கணவரை கத்தியால் குத்தி விட்டு, 8, 9 மற்றும் 12 வயதுடைய 3 குழந்தைகளுடன் சென்று காரை ஏரிக்குள் விட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதன்பின் மீட்பு குழுவினர் அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதுடன் மற்ற 2 குழந்தைகளும் குணமடைந்து சீராக உள்ளனர் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
கத்திக்குத்துக்கிலக்கான கணவர்
காயமடைந்த கணவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சம்பவத்திற்கு காரணமான குறித்த பெண்ணை கைது செய்த போலீஸார், தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.