இந்தியாவுடன் மீண்டும் ஆயுத சண்டைக்கு வாய்ப்பில்லை
இந்தியாவுடன் மீண்டும் ஆயுத சண்டையில் ஈடுபட வாய்ப்பில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளது. ஆனால் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் கூறியதாவது,
சண்டை நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, என்னுடைய கருத்தின்படி புதிய சண்டைக்கு வாய்ப்பு இல்லை. எனினும், இந்தியா ஆயுத சண்டையை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.
நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால், அதற்காக விருப்பப்படவில்லை.
தீவிரவாதம், சிந்து நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் தொடர்பாக கூட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நாடுகிறது. இவ்வாறு இஷாக் தார் தெரிவித்தார்.