ரஷ்யாவின் இந்த செயல் காட்டுமிராண்டித்தனமானது! அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைனில் மொத்தம் 570 சுகாதார மையங்களை ரஷ்ய துருப்புகள் அழித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.
உக்ரைனில் இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் பெப்ரவரி முதல் இதுவரை உக்ரைனில் மொத்தம் 570 சுகாதார மையங்களை ரஷ்ய துருப்புகள் அழித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை குறிவைத்து ரஷ்ய துருப்புகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்த அவர்,
பெப்ரவரி 24-ல் படையெடுப்பு தொடங்கியது முதல் 570 சுகாதார மையங்களும் 101 மருத்துவமனைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் என்றும் குற்றம் சாட்டினார்.