நியூசிலாந்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தில் கர்மடெக் தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காலை 6.11 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் அதிக அளவில் எழுச்சி ஏற்படலாம் என்பதால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
There is no tsunami threat to New Zealand following the M7.1 Kermadec Islands earthquake. Based on current information, the initial assessment is that the earthquake is unlikely to have caused a tsunami that will pose a threat to New Zealand.
— National Emergency Management Agency (@NZcivildefence) April 24, 2023
சுனாமி அச்சுறுத்தல்
மறுபுறம், நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி ஆபத்து இல்லை என்று நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து சுனாமி ஆபத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு சுனாமி உருவாக வாய்ப்பில்லை என்பதுதான் முதல்கட்ட மதிப்பீடாக உள்ளது.
எனினும் நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.