றொரான்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரொறன்ரோவில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சூழல் முகமை (Environment Canada) டொரொன்டோவில் வரவிருக்கும் மிகவும் ஆபத்தான வெப்ப அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 31°C முதல் 36°C வரை அடையலாம் எனவும், இரவிலும் அதிக வெப்பம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வெப்பநிலை 35 பாகை செல்சியஸ் வரையில் செல்லுமெனில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கே இது அதிகமான வெப்பநாளாக இருக்கும்” என சூழலியல் நிபுணர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்தார்.
வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களை ஆதரிக்க நகரமெங்கும் 500க்கும் மேற்பட்ட குளிரூட்டும் இடங்களை திறப்பதாக டொரொன்டோ நகர மேயர் ஒலிவியா சோவ் அறிவித்தார்.
“நகர மையங்கள், நூலகங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் குளிரூட்டும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரெட்கிராஸுடன் இணைந்து முதியவர்கள் மற்றும் அத்தியாவசிய பிரிவுகளை நேரில் சென்று நலச் சோதனை செய்வதற்கான திட்டமும் தொடங்கப்படவுள்ளது,” என அவர் கூறியுள்ளார்.
மக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும், நேரடி வெயிலில் செல்ல வேண்டாம் எனவும் இலகுவான உடைகள் அணிய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.