றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை
றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் அதிகாலை வேளையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பேர்ள் மற்றும் சிம்கோ வீதிகளுக்கு அருகாமையில் ஒர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிராபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோர்த் யோர்க்கின் ஜேன் மற்றும் சோர்ஹம் ட்ரைவ் ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.