பல்கேரியாவில் தீ பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து: குழந்தைகள் உட்பட 45 பேர் பலி
பல்கேரியாவில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில் 45 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, சோபியா நகரில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிக்கி அலறினார்கள். இதை அடுத்து பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்த பேருந்தில் சிக்கியவர்களில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்து விபத்திற்குள்ளான அதற்கான காரணம் தெளிவாக இதுவரையில் தெரியவில்லை. அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி உள்ளது. பல்கேரியா இடைக்கால பிரதமர் ஸ்டெபான் யானேவ் இவ்விபத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்து விபத்தில் மரணமடைந்தவர்களில் பெருமளவிலானோர் வடக்கு மேசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜாயேவ் (Zoran Zaev) இரங்கல் தெரிவித்துள்ளார்.