கனடாவில் தடம் புரண்ட ரயில் ஒன்று கொழுந்துவிட்டு எரிந்ததால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் தென்கிழக்கு Saskatchewan பகுதியில் எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டதுடன் கொழுந்துவிட்டெரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை பகல் நடந்த இச்சம்பவமானது மக்கூனுக்கு வடமேற்கே இரண்டு கி.மீ தொலைவில் நடந்துள்ளது. இதனையடுத்து பிரதான சாலை 39 மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டுள்லது. ரயில் தடம் புரண்ட 2,200 மீற்றர் பகுதிக்குள் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தால் அவசர உதவிக் குழுக்களைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான சாலை 39ஐ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதனிடையே, அதிகாரிகள் தரப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே, சில வீடுகள் ரயில் தடம் புரண்ட இடத்திற்கு அருகாமையில் அமைந்திருந்ததால், மக்கூன் பகுதி அவசரகால நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரெஜினாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 174 கிலோமீற்றர் தொலைவில் மக்கூன் அமைந்துள்ளது.