சாலையோர குடிசைகள் மீது பாய்ந்த லாரி! 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லோத்ரன் - துன்யாபூர் நகரில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குடிசைகள் மீது பாய்ந்தது.
இச்சம்பவத்தில் குடிசைகளில் வசித்தவர்களில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடலை மீட்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாவட்ட பொலிஸார் அறிவித்துள்ளது.