பதவியை இராஜினாமா செய்த கனடா நாடாளுமன்ற சபாநாயகர்!
கனடா நாடாளுமன்றத்தில் நாசிப்படை வீரர் கௌரவிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கனடாவுக்கு பயணம் செய்திருந்தார்.
இந்த பயணத்தின்போது ஜெலன்ஸ்கியுடன் சென்றிருந்த யாரோஸ்லாவ் ஹுங்கா (வயது 98) என்கிற போர் வீரர் கனடா நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஹுங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தபோது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட எம்.பி.க்கள் அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று, கைத்தட்டல்களை வழங்கி மரியாதை அளித்தனர்.
இராஜினாமா வழங்கிய சபாநாயகர்
இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்ட யாரோஸ்லாவ் ஹுங்கா, 2-ம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாசிப்படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும், லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இதனால் இந்த சம்பவம் உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளானது. இதனையடுத்து கனடா நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டா இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
மண்ணிப்பு கேட்ட பிரதமர்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் நாசிப்படை வீரர் கௌரவிக்கப்பட்டமைக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாசிப் படையில் இருந்த நபருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது நாடாளுமன்றத்தையும், கனடாவையும் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கிய ஒரு தவறு ஆகும்.
குறிப்பிட்ட நபர் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டதற்கு சபாநாயகர் அந்தோணி ரோட்டாதான் காரணம். எனினும் நடந்து விட்ட தவறுக்காக நான் மண்ணிப்பு கோருகிறேன்" என்றார்.