டிரம்புக்கு அது தேவை இல்லை; பைடன் அதிரடி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணிப்பின் பேரில், டிரம்புக்கு புலனாய்வு தகவல்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற ஜோ பைடனின் பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தபோதும் ஜோ பைடன்மீது உள்ள வெறுப்பு காரணமாக டிரம்ப் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் வழக்கமாக புதிய அதிபர் பதவி ஏற்றதும் பதவியை விட்டு விலகும் பழைய அதிபருக்கு அரசு புலனாய்வு ரகசியங்கள் குறித்த விரிவான தகவல் வழங்கப்படும். எனினும் அதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்புக்கு வழங்குவதால் எந்த பயனும் இல்லை என ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் மூர்க்கமான குணம் காரணமாக அவருக்கு இதுகுறித்த தகவல்கள் வழங்குவதால் பிரயோஜனம் இல்லை என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிபர் ஜோ பைடன் பணிப்பின் பேரில், டிரம்புக்கு எந்த ஒரு புலனாய்வு தகவலும் தற்போது வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.